கொரோனாத் தொற்றுறுதியானவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்றைய தினம் (டிச-04) இடம்பெற்றுள்ள இவ்விபத்தில், மருதானையிலிருந்து கல்முனை - கதுருவெல பகுதிக்கு கொரோனாத் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து சிக்கி சேதமடைந்துள்ளது.
கொரோனாத் தொற்றாளர்கள் 23 பேரை அழைத்துச்சென்ற பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதி வித்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில், விபத்துக்குள்ளான இரு பேருந்துகளின் சாரதிகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்றிச் செல்லப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு